Saturday 31 March 2012

புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்; The Earth

அனைவருக்கும் வணக்கம், பரந்து விரிந்த இந்த பேரண்டத்தில் மனிதனது செயற்கை கண்களுக்கு (செயற்கைக்கோள்) எட்டிய தொலைவு வரையிலான தேடலின் முடிவில் நாம் வாழும் இந்த புவியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகூட புத்தகங்கள் வாயிலாக புவியை பற்றி நாம் நிறைய படித்திருந்தாலும் கூட அப்போது மதிப்பெண்களுக்காக படித்த காரணத்தினால் நம்மில் பலருக்கு பெரும்பாலான தகவல்கள் மனதில் பதிந்திருக்காது. நாம் வாழும் இந்த கிரகத்தை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய தகவல்களை இந்த பதிவின் வாயிலாக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துவதில் நான் மற்றற்ற மகிழ்ச்சியடைகிறேன். சரி இனி பதிவிற்கு செல்வோமா.? 

3/31/2012 11:43:00 am by MARI The Great · 38

Wednesday 21 March 2012

இங்க் (Ink) உருவான வரலாறு, மை (Ink) பிறந்த கதை; வரலாற்று சுவடுகள்; History of Ink


அனைவருக்கும் வணக்கம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மனித இனத்தின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று கணிப்பொறி (Computer) என்றால் மிகையில்லை. இந்த கணிப்பொறி கண்டறியப்பட்ட பின்புதான் மனித சமுதாயத்தின் லட்சிய இலக்குகள் இப்புவியையும் தாண்டி வானத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. இத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணிப்பொறிக்கு நிகரான கண்டுபிடிப்பு என்று வேறு ஏதாவது இருக்குமென்றால் அது சுமார் 4600 ஆண்டுகளுக்கு (2600 BC) முன்பு சீனர்களால் கண்டறியப்பட்டு இன்றுவரை நாம் எழுதுவதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் மையைத் (Ink) தவிர வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை என்பேன் நான்..! 

3/21/2012 11:08:00 am by MARI The Great · 27

Monday 12 March 2012

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு; வரலாற்று சுவடுகள்; பெட்ரோல் உருவான வரலாறு, history of petrol


அனைவருக்கும் வணக்கம், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா நண்பர்களே?. தற்போது ஈராக்கியர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான் கச்சா எண்ணையை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர். 

3/12/2012 06:42:00 pm by MARI The Great · 28

Monday 5 March 2012

உணவுப்பொருட்களை வீணாக்காதீர்கள்; வரலாற்று சுவடுகள்; Don't Waste Food; varalatru suvadugal


எல்லோருக்கும் வணக்கம்., இந்தஉலகில் ஒரு மனிதன் உண்பதற்கு உணவு இல்லாமல் பசியால் இறப்பதைக்காட்டிலும் கொடுமையான விஷயம் என்று வேறு எதுவும் இருக்க முடியுமா நண்பர்களே?. இதில் மேலும் ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த உலகில் இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதனை தவிர வேறு எந்த உயிரினமும் உண்ண உணவில்லாமல் பசியால் இறப்பதில்லையென்பதுதான்.. அப்படியென்றால் குற்றம் யாரிடத்தில் உள்ளது நண்பர்களே மனிதர்களிடத்திலா அல்லது இறைவனிடத்திலா? 

3/05/2012 11:43:00 am by MARI The Great · 14